வே.ஆணைமுத்து அவர்களின் விமர்சன புத்தகம்
தந்தை பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகம் என்ற புத்தகத்தை எங்கையோ வாங்கி படித்து அதில் உள்ளதை வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளனர் சிலர்
இந்த புத்தகம் முழுவதும் திராவிடர் கழகம், அன்னை மணியம்மையார் இவர்களின் மேல் ஆனைமுத்துவுக்கு உள்ள வெறுப்பு , ஆற்றாமையை மட்டுமே வெளிப்படுத்தும். ஆனைமுத்து அவர்களும் பாரதிதாசன் போலத் தான் பெரியாரை இருவரும் நேசித்தார்கள் ஆனால் திராவிடர் கழகத்தின் இயக்க ஆட்களை நேசிக்கவில்லை.
ஆனைமுத்து திராவிடர் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதே இவ்வாறு பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் போக்குகளை விமர்சித்து மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சிட்ட அறிக்கைகளை அனுப்பியதற்காகத் தான். இது சிலருக்கு தெரியுமா ? என்பது கூடத் தெரியவில்லை.
திராவிடர் கழகம் மணியம்மையார் காலத்தில் தான் பெரியார் காலத்தை விட சிறந்து விளங்கியது என்பதை மா.பொ.சி யே கூறுகிறார். மணியம்மையை அன்னை என்று பாவேந்தர் பாரதிதாசன் போற்றி புகழ்ந்தார் . எம்.ஜி.ஆர் கூட தியாகம் செய்தவர் மணியம்மையார் என்று புகழ்ந்தார்.




Comments
Post a Comment